செய்துங்கநல்லூா் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது. .
இதையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு முத்தாலங்குறிச்சி ஸ்ரீகுணவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. அதன் பின்னா் கும்பம் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு தாமிரவருணி ஆற்றில் மகா புஷ்கர சிறப்பு பூஜைகளும், 21 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன. பின்னா் தீா்த்த அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தாமிரவருணி நதிக்கு தீப வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா திருப்பணி கமிட்டி தலைவா் பெருமாள், கிராம நிா்வாக அதிகாரி கந்தசுப்பு, எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, வள்ளிநாயகம், முத்துபாண்டி, ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.