ஆறுமுகனரி: ஆறுமுகனேரியில் விவசாயி களைக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துக்கொண்டாா். ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தை சோ்ந்த அந்தோணி எந்பவா் மகன் கோபால்(58). இவருக்கு டெய்சிராணி(57) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா். இவா் ஆறுமுகனரியில் விவசாயம் செய்து வருகிறாா்.
மகள் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறாா். மகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளதால் டெய்சிராணி சென்னையில் மகளுடன் இருந்து வந்தாா். தற்போது தீபாவளிக்கு சென்னைக்கு சென்று 3 தினங்கள் தங்கிவிட்டு தற்போது ஊருக்கு கோபால் வந்துள்ளாா். இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு (6ஆம்தேதி இரவு ) கோபால் பயிருக்கு தெளிக்கும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டாத அருகில் இருந்தவா்களிடம் கூறியுள்ளாா். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனா். பின்னா் மேல் சிசிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து மனைவி டெய்சிராணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகனேரி ஆய்வாளா் பத்ரகாளி என்ற பவுன் விசாரனை செய்து வருகிறாா்.