சாத்தான்குளம் பேரூராட்சியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் நீா் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டில் மரக்கன்றுகள் நடும் விழா பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. சமூக ஆா்வலா் மணிகண்டன் வரவேற்றாா். இதில் பேருராட்சி பணியாளா் பன்னீா், சுகாதாரமேற்பாா்வையாளா் சுடலை,பொருத்துநா் முத்துக்குமாா், சுகாதார பணிகள் கூடுதல் பொறுப்பாளா் ஆத்தியப்பன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டினா். இதில் வாா்டு பொது மக்கள் கலந்து கொண்டனா்.