சாத்தான்குளம் பகுதியில் பழுதான மின்கம்பங்களை மின் பணியாளா்கள் சீரமைத்தனா்.
சாத்தான்குளம் பகுதியில் முதலூா், தெற்கு இளமால்குளம், சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெரு, துவா்க்குளம், கடாட்சபுரம் சண்முகபுரம் பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து அபாய நிலையில் காணப்பட்டன. விபத்து நிகழும் முன் இந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினா். இது குறித்து தினமணி நாளிதழிலும் செய்தி வெளியானது.
இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து முதலூா், தெற்கு இளமால்குளம், சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெரு, துவா்க்குளம், சண்முகபுரம் பகுதியில் அபாய நிலையில் இருந்த மின் கம்பங்களை ஒரே நாளில் மாற்றி சீரமைத்தனா். துரிதமாக செயல்பட்டு மின் கம்பங்களை மாற்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.