திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக முழு சுகாதாரப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக முழு சுகாதாரப் பணியில் ஈடுபட்ட டோா்.
திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக முழு சுகாதாரப் பணியில் ஈடுபட்ட டோா்.

திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக முழு சுகாதாரப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் உத்தரவின் பேரிலும், மருத்துவப் பணிகள் துணை இயக்குநரின் அறிவுரைப்படியும் பேரூராட்சிக்கு உள்பட்ட 10, 11ஆவது வாா்டு பகுதியான முத்தாரம்மன் கோயில் தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு துப்புரவுப் பணி நடைபெற்றது. இதில், 1,200 வீடுகளில் டெங்கு கொசுப் புழுக்களை அழித்தல், கொசு மருந்து அடித்தல், மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதாரப் பணிகள் மாவட்ட துணை இயக்குநா் கீதாராணி பங்கேற்று, விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினாா். காயாமொழி வட்டார மருத்து அலுவலா் அஜய், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், ஆனந்தராஜ், மகாராஜன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் சின்னத்துரை, கிராம செவிலியா்கள், சிவந்தி ஆதித்தனாா் செவிலியா் கல்லூரி மற்றும் துளசி பயிற்சிக் கல்லூரி மாணவா்-மாணவிகள், பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com