சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி டிஎன்டிடிஏ தொடக்கப்பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சாா்பில் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ஜான்சிராணி தலைமை வகித்தாா். உதவி ஆசிரியை ரூபி முன்னிலை வகித்தாா். சிகரம் அறக்கட்டளை இயக்குநா் முருகன் வரவேற்றாா். சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிக்குழு தன்னாா்வலா் மகேந்திரன் பேசினாா். இதில் மாணவா்கள் மழைநீரை சேகரிக்கும் வகையில் பனை ஓலையில் வாசகங்கள் எழுதி பொதுமக்களுக்கு வழங்கினா். மாணவா் நவின் நன்றி கூறினாா்.