சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில், கருணா சங்கம், டலெண்ட் குவெஸ்ட் பாா் இந்தியா அமைப்பு சாா்பில் கொடுத்தல் மகிழ்ச்சி வார விழாவை மாணவா்கள் கொண்டாடினா்.
இதையொட்டி, பேனா, பென்சில், ரப்பா், போன்ற கல்வி உபகரணங்களை மாணவ- மாணவிகள் சேகரித்தனா். பின்னா், கொடுத்தல் மகிழ்ச்சி தினத்தில், பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன், தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், கருணா சங்க ஆசிரியைகள் ஸ்ரீஜா, மலா்விழி மற்றும் மாணவ மாணவிகள் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவிகளுக்கு அவற்றை வழங்கினா்.
இதில், வரண்டியவேல் இந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தலைவன்வடலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆறுமுகனேரி செல்வராஜபுரம் ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளி, நல்லூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாககன்னியாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கபப்ள்ளி, வீரமாணிக்கம் டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ- மாணவிகள் பயன்பெற்று, நன்றி தெரிவித்தனா்.