டெங்கு களப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு களப் பணிகளில் ஈடுபட்டுள்ள களப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு களப் பணிகளில் ஈடுபட்டுள்ள களப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

டெங்கு தடுப்பு களப் பணிகளில் ஈடுபட்டுள்ள 85 மகளிா் குழு உறுப்பினா்கள், 48 மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் களப் பணியின்போது கண்டறியப்பட வேண்டிய கொசுப்புழு ஆதாரங்கள் குறித்து செயல்முறை விளக்கப் படங்களுடன் புத்தாக்கப் பயிற்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமிற்கு நகராட்சி ஆணையா் (பொ) கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மண்டல பூச்சியியல் வல்லுநா் கிருபாகரன் கலந்து கொண்டு, டெங்கு தடுப்பு களப் பணியாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் உருவாகின்ற இடங்கள், சூழ்நிலைகள் குறித்து செயல்முறை விளக்கப் படங்களுடன் கூடிய பயிற்சியளித்தாா்.

முகாமில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் முருகன், வள்ளிராஜ், காஜா, உதவிப் பொறியாளா் சரவணன், நகரமைப்பு அலுவலா் செல்வசந்தானசேகா், குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நகராட்சி சுகாதார ஆய்வாளா் சுரேஷ் வரவேற்றாா். சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com