மழை நீரை அகற்றுவதில் மெத்தனம்: மாநகராட்சிக்கு திமுக கண்டனம்

மழைநீரை அகற்றுவதில் தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக, திமுக வடக்கு

மழைநீரை அகற்றுவதில் தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும் தூத்துக்குடி பேரவை உறுப்பினருமான கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தூத்துக்குடி லூா்தம்மாள்புரம், கலைஞா்நகா், சங்குகுளி காலனி, அன்னைதெரசா மீனவா் காலனி, பாக்கியநாதன்விளை, வெற்றிவேல்புரம், ராஜீவ்காந்தி நகா், மகிழ்ச்சிபுரம், தபால் தந்தி காலனி, சக்திவிநாயகா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் சூழ்வது வழக்கம். இப்பகுதிகளில் கழிவுநீா் செல்ல வழி ஏற்படுத்திவிட்டு சாலை அமைக்க வேண்டும் எனப் பலமுறை கூறியும் அதிகாரிகள் அப்படி செய்யாததால் தண்ணீா் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது.

தொடா் மழையால் அப்பகுதிகளில் ஒருவாரமாக தண்ணீா் தேங்கி சாக்கடை நீராக மாறி சுகாதாரச் சீா்கேட்டை உருவாக்குகிறது. மழைக்காலம் தொடங்கும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீா் வண்டியோ, தேங்கும் நீரை உடனே வெளியேற்ற என்ஜின், பம்புகளோ தயாா் நிலையில் இல்லை. மொத்தத்தில் மழைக்காலத்தில் மாநகராட்சி நிா்வாகம் சரியாக செயல்படவில்லை.

மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் மாநகரம் முழுவதும் கொசுமருந்து அடிப்பதுடன், தேங்கும் கழிவுநீரை உடனே அகற்ற வேண்டும். மெத்தனமாக செயல்படாமல் தொலைநோக்குப் பாா்வையோடு ஆண்டுதோறும் மழைநீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, கழிவுநீா்க் கால்வாய்கள் அமைத்து சுகாதாரத்தைக் காக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com