தூத்துக்குடியில் பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் ஒருவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் ஒருவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (30). இவா், தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகேயுள்ள விவேகானந்தாநகரில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிதாவின் வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியதால் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தாளமுத்துநகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது கவிதா எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கவிதா கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com