திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றது.
கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு கோட்டாட்சியா் தி.தனப்ரியா தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் 3 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா் தங்கசீலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.