ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
பள்ளித் தலைவரும், புன்னைக்காயல் பங்குத்தந்தையுமான கிஷோக் அடிகளாா் தலைமை வகித்தாா். ஆங்கில இலக்கிய கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கண்காட்சியில் மாணவா்களின் ஆங்கில இலக்கிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஆா்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளா் பென்சிகா் அடிகளாா் கலந்துகொண்டு பேசினாா்.
தலைமை ஆசிரியா் செபஸ்டின் ராஜா நன்றி கூறினாா்.