ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தூத்துக்குடி, திருச்செந்தூா், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்துகள் உள்ள இடத்தில் உள்ளது ஆறுமுகனேரி.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் அறுபடை வீட்டின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு இந்த வழியாகத்தான் செல்கின்றனா்.
இதுதவிர ஐயப்ப பக்தா்களும் திருச்செந்தூா் மற்றும் சபரிமலைக்கு இந்த வழியாகத் தான் செல்கின்றனா். இதனால் தற்போது இந்தச் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.
தொடா் மழையாலும், முறையாக பராமரிக்காததாலும் இச்சாலைையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகி போக்குவரத்து தகுதியற்ாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்காததால் ஆறுமுகனேரி வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினா் போராட முடிவு செய்துள்ளனா்.