உடன்குடி ஒன்றியத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குலசேகரன்பட்டினம், மாதவன்குறிச்சி பகுதிகளில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணை குளம், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நடைபெற்ற இட ங்களை திட்ட பாா்வையாளா் ஜோயா, பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். மண்டல அலுவலா் தேவிகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராணி, பானு, பொறியாளா் அருணாபிரதாயனி, ஒன்றிய மேற்பாா்வையாளா் பெத்துராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.