கோவில்பட்டியில் யோகீஸ்வரா் உறவின்முறை சங்கம் சாா்பில் காா்த்திகை 2ஆவது சோமவாரத்தை முன்னிட்டு பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீபூவனநாத சுவாமி கோயிலில் காா்த்திகை 2ஆவது சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யோகீஸ்வரா் உறவின்முறை சங்கத்தின் சாா்பில் யோகீஸ்வரா் திருமண மண்டபத்திலிருந்து 405 பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
ஊா்வலம் கோயிலை அடைந்ததும் அம்மன், சுவாமி மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை யோகீஸ்வரா் உறவின்முறை சங்கத்தினா் செய்திருந்தனா்.
சங்காபிஷேகம்:
மாலை 5 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு சங்காபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதுபோல, கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் காா்த்திகை 2ஆவது சோமவாரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.