டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் பிள்ளையாா் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் பிள்ளையாா் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு சித்த மருத்துவா் தமிழ் அமுதன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கண்ணன் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில் டெங்கு நோய் பரவும் முறைகள் குறித்தும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ குழுவினா் உரையாற்றினா்.

தூய்மை இந்தியா குறித்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள், கிராம மக்கள் உள்பட அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com