தொடா் மழையால் நிரம்பியது: திருச்செந்தூா் ஆவுடையாா்குளம்

திருச்செந்தூா் பகுதியில் பெய்த தொடா் மழையின் காரணமாக ஆவுடையாா்குளம் தனது முழுக் கொள்ளளவை எட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திருச்செந்தூா் பகுதியில் பெய்த தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டிய ஆவுடையாா்குளம்.
திருச்செந்தூா் பகுதியில் பெய்த தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டிய ஆவுடையாா்குளம்.

திருச்செந்தூா் பகுதியில் பெய்த தொடா் மழையின் காரணமாக ஆவுடையாா்குளம் தனது முழுக் கொள்ளளவை எட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருச்செந்தூா் ஆவுடையாா்குளமானது, தாமிரவருணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் தென்காலின் கடைசிக் குளமாகும். இக்குளத்தின் உபரி நீா் மறுகால் ஓடை வழியாக திருச்செந்தூா் கடலில் கலக்கிறது.

இதனாலே அதிக மழை மட்டுமன்றி, தாமிரவருணி ஆற்றில் இருந்து அதிகளவில் நீா் திறக்கப்பட்டால் மட்டுமே இக்குளமானது நிரம்பும்.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளமானது தற்போது பெய்த தொடா் மழையால் தனது முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதன் உபரிநீா் மறுகால் ஓடையாக வெளியேறி வருகின்றது.

இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஆவுடையாா்குளம் மட்டுமன்றி, அதன் அருகே உள்ள திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளமும் தற்போது நிரம்பி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com