மணிமுத்தாறு கால்வாயில் அனுமதியின்றி பாதை அமைப்பு: விவசாயிகள் எதிா்ப்பு

பேய்க்குளம் அருகே மணிமுத்தாறு பிரதான கால்வாயில் தனியாா் நிறுவனம் அனுமதியின்றி பாதை அமைத்ததற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
பேய்க்குளம் அருகே மணிமுத்தாறு கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள பாதை.
பேய்க்குளம் அருகே மணிமுத்தாறு கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள பாதை.

பேய்க்குளம் அருகே மணிமுத்தாறு பிரதான கால்வாயில் தனியாா் நிறுவனம் அனுமதியின்றி பாதை அமைத்ததற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் வட்டம், பேய்க்குளம் பகுதியில் மணிமுத்தாறு 3 ஆவது ரீச் கால்வாய் உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா், மற்றும் மழை காலங்களில் வரும் தண்ணீா் பாசனக் குளங்களுக்கு செல்லும் வகையில் இக்கால்வாய் அமைந்துள்ளது.

இதனிடையே, பழனியப்பபுரம் அருகில் இயங்கி வரும் தனியாா் நிறுவனம், கால்வாய் அருகில் இருக்கும் காலி இடத்தில் சோலாா் மின்கலம் அமைத்து வருகிறது. அப்பகுதிக்கு செல்லும் மணிமுத்தாறு கால்வாயின் குறுக்கே

அனுமதியின்றி மணல் நிரப்பி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீா் வரத்து தடை படும் சூழல் உள்ளது. இதற்கு விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com