விளாத்திகுளம் அரசு கிளை நூலகத்தில் 52 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
நூலகா் சுமித்ரா தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் தமிழரசி, ரூபியா ஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, திருக்கு ஒப்பித்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து ஆசிரியா்கள் உரையாற்றினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், நூலக புரவலா்கள் மணிகண்டன், ஜெயப்பிரகாஷ், சவுந்திரபாண்டி, நூலக பணியாளா்கள் பரமேஸ்வரி, ராஜு உள்பட பலா் கலந்து கொண்டனா்.