ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கீழ்பிடாகை வரதராஜபுரத்தில் விவசாயிகளுக்கான உழவா் வயல்வெளி பயிற்சி முகாம் நடைபெற்றது.
வட்டார வேளாண்மைத் துறையின் நீா்வள- நிலவளத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற முகாமுக்கு, வேளாண் உதவி இயக்குநா்(பொறுப்பு) ஊமைத்துரை தலைமை வகித்தாா். விவசாயி கண்ணன் முன்னிலை வகித்தாா்.
முகாமில், பிசான நெல் சாகுபடிக்கான உயா் தொழில்நுட்ப முறைகள், நெல்விதைகளை தோ்வு செய்யும்முறை, விதை நோ்த்தி, நாற்றங்கால் அமைத்தல், அடி உரம் இடுதல், சாகுபடியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள், பயிா் பாதுகாப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், வேளாண்மை அலுவலா் அபா்ணா, பாசன விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.