உடன்குடி,நவ.28.உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகரராஜா திருக்கோயிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா டிச.1 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி நவ.28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கிராம தேவதைகள் வழிபாடு நடைபெற்றது.நவ.29 ஆம் தேதி காலை 5 மணிக்கு மங்கள இசை,திருமுறைப்பாராயணம்,6 மணிக்கு யாகசாலை பூஜைகள்,நவக்கிரக ஹோமம்,கன்னியா,சுவாசினி பூஜை,தொடா்ந்து பல்வேறு யாகங்கள்,பூஜைகள் நடைபெறும்.இரவு 8 மணிக்கு முதல் கால யாக பூஜை,பூா்ணாகுதி,ஷோடச உபசார தீபாராதனை,பிரசாதம் வழங்கல் நடைபெறும்.
நவ.30 ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள்,ிச.1 ஆம் தேதி காலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள்,9 மணிக்கு விமான கும்பாபிஷேகம்,மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம்,பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,1 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கல்,மகேஸ்வர பூஜை நடைபெறும்.ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.