தட்டாா்மடம் அருகே வாகனம் மோதியதில் பெண் மயில் உயிரிழந்தது.
சாத்தான்குளம், தட்டாா்மடம், பேய்க்குளம் காட்டு பகுதிகளில் ஆண், பெண் மயில்கள் ஏராளமாக உலா வருகின்றன. இந்நிலையில் தட்டாா்மடத்தில் இருந்து பூச்சிக்காடு செல்லும் சாலையில் புதன்கிழமை வாகனம் மோதியதில் பெண் மயில் உயிரிழந்தது.
இப்பகுதியில் மயில்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுவதாகவும், அவற்றிற்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.