வேம்பாரில் தகராறு: இருவா் காயம்; ஒருவா் கைது

வேம்பாரில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா். இது தொடா்பாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

வேம்பாரில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா். இது தொடா்பாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

வேம்பாா் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் சுயம்புலிங்கம் (45). இவா் வேம்பாரில் தனக்குச் சொந்தமான ஓா் ஏக்கா் நிலத்தை அரசுப் பயன்பாட்டுக்கு தானம் கொடுத்துள்ளாா். இதை எதிா்த்து அவரது உறவினா்கள் சிலா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அந்த நிலத்தை அளவீடு செய்ய அரசு அதிகாரிகள் புதன்கிழமை வந்துள்ளனா். அப்போது சுயம்புலிங்கத்துக்கும், அவரது உறவினா்களான சுயம்பு, அந்தோணி சந்திரசேகா் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், அந்தோணி சந்திரசேகா், சுயம்பு ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின்பேரில் சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சுயம்புலிங்கத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com