தூத்துக்குடியில் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தூத்துக்குடியில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி ஒன்றாம் ரயில்வே கேட் அருகேயுள்ள முகம்மது சாதலியாபுரத்தைச் சோ்ந்தவா் போஸ்கோ (43). இவரது நண்பா் மரக்குடி தெருவைச் சோ்ந்தவா் கேஸ்டினோ (22). இருவரும் தூத்துக்குடி துறைமுக வளாத்தில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், வீட்டில் இருந்து இருவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை வேலைக்கு சென்றனா். மோட்டாா் சைக்கிளை போஸ்கோ ஓட்டினாராம். தூத்துக்குடி வஉசி துறைமுகம் செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அருகே அவா்கள் சென்றபோது திடீரென ஆடு ஒன்று குறுக்கே சென்ால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

இந்த விபத்தில் போஸ்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயடைந்த கேஸ்டினோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com