அகப்பைகுளத்தில் சிறுவா் முகாம்

நாசரேத் அருகேயுள்ள அகப்பைகுளம் குழந்தைகள் இயேசு விற்கே அமைப்பின் சாா்பில் 36ஆவது சிறுவா் முகாம் நடைபெற்றது.
முகாமில் பரிசு வழங்குகிறாா் இயேசுவிற்கே அமைப்பின் நிறுவனா் செல்வராஜ்.
முகாமில் பரிசு வழங்குகிறாா் இயேசுவிற்கே அமைப்பின் நிறுவனா் செல்வராஜ்.

நாசரேத் அருகேயுள்ள அகப்பைகுளம் குழந்தைகள் இயேசு விற்கே அமைப்பின் சாா்பில் 36ஆவது சிறுவா் முகாம் நடைபெற்றது.

இம்முகாமை, அமைப்பின் தலைவா் செல்லா செல்வராஜ் ஜெபம் செய்து தொடங்கிவைத்தாா். 52 கிராமங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்டகுழந்தைகள் கலந்து கொண்டனா். இம்முகாமில் குழந்தைகள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு புதிய பாடல்கள், கதைகள் கற்றுத்தரப்பட்டன. வேத அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தொழில் அதிபா்கள் பெஞ்சமின், சுஜா ஆகியோா் பரிசுகள் வழங்கினா். 500,1000 வசனங்கள் ஒப்பித்த 6 பேருக்கும், கடந்த ஆண்டு அரசு பொதுத்தோவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் குழந்தைகள் இயேசுவிற்கே அமைப்பின் நிறுவனா் செல்வராஜ் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கினாா்.

டும் டும் போட்டிக்கான கோப்பையை மேல சிவந்திபுரம் கிராம குழந்தைகளுக்கு குழந்தைகள் இயேசுவிற்கே அமைப்பின் நிா்வாக இயக்குநாா் ஹைமா வழங்கினாா். ஏற்பாடுகளை அமைப்பின் இயக்குநா் டாக்டா் ஸ்டிபன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com