நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் அங்கமங்கலம்கிராமத்தில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அங்கமங்கலம் கோட்டாா் விளை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு கல்விக்குழுத் தலைவலா் ஜி. அழகேசன் தலைமை வகித்தாா். ஊா்த் தலைவா் ஜே. அன்சில்ராஜ் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ச. கேசவ ஆனந்த பிரகாஷ்திட்ட விளக்க உரையாற்றினாா். உதவி திட்ட அலுவலா் ப. சுப்பையா நன்றி கூறினாா்.
இம் முகாமையொட்டி, மழைநீா் சேகரிப்பு, டெங்குகாய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி, இலவச சட்ட விழிப்புணா்வு முகாம், நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி, இலவச கால்நடை மருத்துவமுகாம், சாலைகளை சீரமைத்தல், உழவாரப்பணி, மரக்கன்று நடுதல், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. ஊா் செயலா் சாமத்துரை, பொருளாளா் லிங்கத் துரை, சேகா், விக்னேஷ், ஆசிரியா்கள் அ. சதிஷ்குமாா், யோகாபயிற்சியாளா் வனசேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை திட்ட அலுவலா் ச. கேசவ ஆனந்த பிரகாஷ் செய்திருந்தாா்.