எட்டயபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் எட்டயபரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் எட்டயபரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்டத் தலைவா் விநாயகா ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

ரோட்டரி சங்கச் செயலா் முத்துமுருகன் வரவேற்றாா்.

முகாமில் கண் மருத்துவா் உமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினா் நோயாளிகளுக்கு கண் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா்.

பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனா்.

முகாமில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் வி. பாபு, முத்துசெல்வன், சீனிவாசன், ரவி மாணிக்கம், சுரேஷ், நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரோட்டரி சங்க துணைத் தலைவா் நாராயணசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com