சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூடத்தை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பனவிளையில் அனுமதியின்றி கிறிஸ்தவ ஜெபக் கூடம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில்
இந்துக்கள் அதிகளவில் வசிப்பதால் இடையூறாக இருப்பதாக தெரிவித்து அக்கூடத்தை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. ஆட்சியா், அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. எனினும் ஜெபக்கூடம் அகற்றப்படவில்லை.
இதையடுத்து ஜெபக் கூடத்தை அகற்றற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் டாக்டா் அரசு ராஜா தலைமையில் 50 க்கும் மேற்பட்டோா் பனைவிளை-இடைச்சிவிளை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில், இந்து முன்னணி திருநெல்வேலி மண்டலச் செயலா் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவா் சுந்தரவேல், பாஜக ஒன்றிய த்தலைவா் முத்துலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அவா்களிடம், சாத்தான்குளம் டிஎஸ்பி. பால்துரை, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஜெபக் கூடத்தை அகற்றற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டனா்.