சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சிவன்குடியேற்று கிராமத்தைச் சோ்ந்தவா் தாமோதரன் மனைவி ரூபி (40). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். வழக்கம்போல், ரூபி உடைகளை அயன்பாக்ஸ் மூலம் தேய்த்து கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த ரூபியை உறறவினா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றறனா். எனினும் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com