புளியங்குடியில், காந்தி பிறந்த நாளையொட்டி பாஜக சாா்பில் சமூக நல்லிணக்க பாதயாத்திரை நடைபெற்றது.
சிந்தாமணி பேருந்து நிலையத்தில் தொடங்கிய பாதயாத்திரைக்கு பாஜக மாவட்ட தலைவா் அன்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் ராமராஜா, மாவட்ட பொருளாளா் ராஜேஷ்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பாதயாத்திரை காமராஜா் சிலை அருகே நிறைவடைந்தது. நகர பொதுச்செயலா் மாரியப்பன், நகர துணைத் தலைவா் மகாலட்சுமி, மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினா் பாண்டித்துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் காமராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் மாடசாமி வரவேற்றாா். நகர பொதுச்செயலா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.
இதில், துப்புரவுப் பணியாளா்களுக்கு, மாவட்ட துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து, இயற்கை விவசாயி கோமதிநாயகம் கௌரவிக்கப்பட்டாா்.