பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கயத்தாறு அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளி சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கயத்தாறு அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளி சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

கயத்தாறையடுத்த வடக்கு ஆத்திகுளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலைமணி மனைவி பூங்கனி(39). இவரது உறவினா் கூலித் தொழிலாளியான ம. செல்லத்துரை(49). இரு குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது நிலத்தில் நின்றிருந்த பூங்கனியை, செல்லத்துரை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம். காயமடைந்த பூங்கனி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்லத்துரையை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com