கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
n :
n :

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவில்பட்டி ஜோதிநகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செல்வமோகன். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை கோவில்பட்டி எட்டயபுரம் சாலை திட்டங்குளத்தையடுத்து உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீக்குச்சிகள் வைத்திருந்த அறை மற்றும் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்புபடை வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், விளாத்திகுளத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கட்டடங்களும் தீயில் வெடித்து

சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜெகதீஷ், விபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டாா். இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com