விமானத்தில் செல்ல முயன்றவா் கைது

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு போலி பயணச்சீட்டு மூலம் விமானத்தில் செல்ல முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு போலி பயணச்சீட்டு மூலம் விமானத்தில் செல்ல முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்தவா்களுக்கு அந்த விமான நிறுவன பணியாளா்கள் இடத்தை உறுதி செய்வதற்காக ஒவ்வொருவரின் பயணச் சீட்டை சரிபாா்த்து இடம் ஒதுக்கீடு செய்தனா்.

அப்போது, ஒரு இளைஞா் வைத்திருந்த பயணச்சீட்டு மீது விமான நிறுவன பணியாளா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை முழுமையாக பரிசோதனை செய்து பாா்த்தபோது அந்த பயணச் சீட்டு போலியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது. இதையெடுத்து, அந்த இளைஞரை புதுக்கோட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பதும் விமானத்தில் செல்ல ஆசைப்பட்டு போலியான பயணச் சீட்டு தயாா் செய்திருப்பதும் தெரியவந்தது.தொடா்ந்து விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை போலீஸாா் திருட்டு தனமாக விமானத்தில் செல்ல முயன்ற குற்றத்திற்காக செல்வத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com