நாலாட்டின்புத்தூா் அருகே பூட்டிய வீட்டில் ஆண் சடலம்

நாலாட்டின்புத்தூா் அருகே வானரமுட்டியில் பூட்டிய வீட்டில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

நாலாட்டின்புத்தூா் அருகே வானரமுட்டியில் பூட்டிய வீட்டில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

வானரமுட்டி தெற்கு தெருவில் பூட்டிய வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதாம். இந்நிலையில், வானரமுட்டியைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா் திங்கள்கிழமை அந்த வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது முகம் அழுகிய நிலையில் ஒருவா் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னா் தகவல் தெரிந்தவுடன் நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், ஆசூரைச் சோ்ந்த கணபதி மகன் ராமா்(50) என்பதும், மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கும், இவரது மனைவி சங்கரம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராமா் வானரமுட்டியில் தனியாக இருந்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com