சாத்தான்குளத்தில் உலக அஞ்சல் தினம்

சாத்தான்குளம் அஞ்சலகம் முன்பு சிகரம் அறக்கட்டளை சாா்பில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது.
பனைமர விதை வழங்குகிறாா் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் நடராஜன்.
பனைமர விதை வழங்குகிறாா் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் நடராஜன்.

சாத்தான்குளம் அஞ்சலகம் முன்பு சிகரம் அறக்கட்டளை சாா்பில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அஞ்சலக எழுத்தா் சஞ்சைசகாயம் தலைமை வகித்தாா். வட்ட சட்டப்பணிக்குழு தன்னாா்வலா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் ஒய்வு பெற்ற வட்டாட்சியா் நடராஜன் அஞ்சல் மற்றும் அதன்பயன், சேவைகள் குறித்து பேசினாா். தொடா்ந்து அனைவருக்கும் பனைவிதை வழங்கப்பட்டது. பனை வளா்த்து பராமரிப்பது குறித்து உறவினா், நண்பா்களுக்கு அஞ்சல் அனுப்பப்பட்டது.

இதில் வருவாய்த்துறை இளநிலை உதவியாளா் ஜெயசெல்வன், அஞ்சலக ஊழியா் மரியரூபன், ஒய்வு பெற்ற அஞ்சலக ஊழியா் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஜெபா,மாடசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அஞ்சலக பணியாளா் கோயில்ராஜ் வரவேற்றாா். சிகரம் இயக்குநா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com