சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி மன்றம் சாா்பில் பிரதமா், உள்துறை அமைச்சருக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பெயா் சூட்ட வேண்டும். கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் நற்பணி மன்றம் சாா்பில் உலக அஞ்சல் தினமான வியாழக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினா்.
நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலா் வினோத்குமாா் தலைமை வகித்தாா். இதில் திரளானோா் கலந்து கொண்டு கடிதங்கள் அனுப்பினா். ஏற்பாடுகளை நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் நற்பணி மன்றத்தைச் சோ்ந்த பாலமுருகன், வெங்கட்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.