பிரதமா் மோடி- சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழகத்துக்கு பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரின் வருகையை வரவேற்று ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். பிரதமா் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்.
நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.
முன்னதாக, மு.க. ஸ்டாலினை சந்தித்த தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன், தனது ஒரு மாத சம்பளத் தொகையை கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக வழங்கினாா்.