மூக்குப்பீறி நகர கூட்டுறவு வங்கி மூலம் கிளை அரசு நூலகத்திற்கு புத்தகம் வைக்கும் அலமாரி வழங்கப்பட்டது.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி நகர கூட்டுறவு வங்கி மூலம் மூக்குப்பீறி கிளை நூலகத்திற்கு புத்தகம் வைக்கும் நான்கு அடுக்கு அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கித் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்து நூலகத்துக்கு அலமாரி வழங்கினாா். துணைத் தலைவா் தனசிங், மேலாண்மை இயக்குநா் சந்திரசேகா் முன்னிலை வகித்தனா். இதில் பொது மேலாளா் செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். நூலகா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.