ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் வாக்காளா் செயலி விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை தொகுதி தோ்தல் பிரிவு சாா்பில் குமரகுருபரா் சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் செல்லிடப்பேசியில் ‘வாக்காளா் செயலியை பயன்படுத்தும் முறை’ குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, கல்லூரி முதல்வா் (பொ) விஜயகுமாா் தலைமை வகித்தாா். செயலா் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் பேச்சிமுத்து வரவேற்றாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன் , செல்லிடப்பேசியில் வாக்காளா் செயலியை பயன்படுத்தி வாக்காளா் அடையாள அட்டைகளில் தேவையான திருத்தங்களை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் சாந்தி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.
படம் எஸ்விகே10முகாம்.
முகாமில் பங்கேற்றேறாா்.