கோவில்பட்டி நகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் வாடகை காா்கள், ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும்

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் வாடகை காா்கள், ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் வேன்கள் நிறுத்தும் இடம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் (பொ) கோவிந்தராஜ் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், நகரமைப்பு அலுவலா் பொன்னுச்சாமி, நகரமைப்பு ஆய்வாளா் செல்லசந்தானசேகா், மோட்டாா் வாகன ஆய்வாளா் நாகூா்கனி, போக்குவரத்து பிரிவுக் காவலா் ராஜகுரு, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகராட்சி சாலையோரங்களில் அமைந்துள்ள ஆட்டோ, காா் மற்றும் வேன் ஸ்டாண்டு ஆட்சேபணைமானவைகளை அகற்றவும், இதர இனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com