கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேம்பாா் - பருவக்குடி சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று 5 ஆண்டுகள் வரை சாலையின் பராமரிப்புப் பணி மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்புப் பிரிவினா் கண்காணிக்க வேண்டும்.
இதையடுத்து, கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் தெற்கு திட்டங்குளம் வரையுள்ள சாலை விரிவாக்கப் பணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் (பராமரிப்புப் பணி) கஸ்தூரி தலைமையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.