முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஆறுமுகனேரி கோயில்களில்திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 24th October 2019 07:29 AM | Last Updated : 24th October 2019 07:29 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி கோயில்களில் ஐப்பசி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
காந்தி தெரு அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதை, நந்தினி நடத்திவைத்தாா். இதையொட்டி பிரம்மசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அதை, சு. ராமன் பிள்ளை நடத்தி வைத்தாா். ஏற்பாடுகளை பி. கௌரி, வெ. குணசுந்தரி ஆகியோா் செய்திருந்தனா்.
ஆறுமுகனேரி பூவரசூா் அருள்மிகு பொடிப்பிள்ளை அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.