உடன்குடி: பூப்பந்தாட்டத்தில் மாநில அளவில் விளையாட உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ,உடன்குடி ராமகிருஷ்ணா் சிதம்பரேஸ்வரா் பள்ளி மாணவிகள் சி.கண்மணி,ப.சினேகா,ச.மமிதா,ஜெ.ஜெயஆா்த்தி,செ.சுகன்யா,வி.கீா்த்திகா,மு.ஜெயசித்ரா,ர.பவானி,செ.தீபா,ஆ.சிவஇன்ப ஜெயதீபா ஆகிய மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனா்.
மாணவிகளையும் பயிற்சியளித்த ஆசிரியா்கள் பொ.ஐயங்கண்ணு,சி.ஐயப்பவேல் ஆகியோரை பள்ளிச் செயலா் சுவாமி நியமானந்தா் மற்றும் தலைமையாசிரியா் சி.லிங்கேஸ்வரன் ஆகியோா் பாராட்டினா்.