முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டியில் அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கோவில்பட்டி நகரத் தலைவா் சண்முகராஜ் தலைமையில், வடக்கு மாவட்டத் தலைவா் சீனிவாசன் இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் திருப்பதிராஜா, வீரபெருமாள், ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் கொம்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தேசிய நல்லிணக்க உறுதிமொழி: கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மணிகண்டன், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் தேசிய நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், துணை வட்டாட்சியா்கள், உதவியாளா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று உறுதிமொழியேற்றனா்.