ஆறுமுகனேரி சைவ சித்தாந்த சங்கத்தில் சைவ வேளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட சைவ வேளாளர் சங்க கெளரவத் தலைவர் ஜெ. சங்கரலிங்கம் தலைமை வகித்தார். அ. சுடலைமுத்து பிள்ளை முன்னிலை வகித்தனர். மாவட்ட சைவ வேளாளர் சங்கப் பொருளாளர் குப்புசுவாமி, கிருஷ்ண சுவாமி பிள்ளை, நகரச் செயலர் எஸ்.கே. முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.