சாத்தான்குளம் சன்னதி தெருவில் பாரதி இலக்கிய மன்றம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வி அலுவலர் சாமுவேல், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜான்லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் பற்றி ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வீரசிகாமணி, ஓய்வுபெற்ற வட்டாட்சியர் நடராஜன், அஞ்சலக அதிகாரி ராஜி ஆகியோர் பேசினர். பாரதியார் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
யோகா ஆசிரியை ராஜலட்சுமி, அஞ்சலக ஊழியர்கள் அழகய்யா, லெனின்முருகன், ஆசிரியர் சந்தனமரியான், மகேஸ்வரி, மயில், ராஜபாண்டியன், கோபாலகிருஷ்ணன், வெள்ளைப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா வரவேற்றார். ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தர் பிரேம்குமார் நன்றி கூறினார்.