கருங்கடல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை பவனி, ஆடம்பர திருப்பலி, மாலை ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10 ஆம் நாள் தூத்துக்குடி மறை மாவட்டச் செயலர் நார்பட் தாமஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. நான்குனேரி ஞானராஜ் மறையுரையாற்றினார். மாலையில் தேர் பவனி, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. நிறைவு நாளில் நன்றி திருப்பலி, நற்கருணை ஆசீர், அசனம் , கொடியிறக்கம் உள்ளிட்டவை நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை நொச்சிக்குளம் பங்குத் தந்தை ஜான்பால் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.