சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:  போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பேய்க்குளம் அருகே  10 வயது சிறுமிக்கு  பாலியல் தெந்தரவு செய்ததாக  பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பேய்க்குளம் அருகே  10 வயது சிறுமிக்கு  பாலியல் தெந்தரவு செய்ததாக  பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
   பேய்க்குளம் அருகேயுள்ள சந்தோசபுரத்தைச் சேர்ந்த ஜெபமணி மகன் செல்லத்துரை (53), ஆசிர்வாதபுரம் மேல்நிலைப் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் . இவர் அப்பகுதியை சேர்ந்த தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த 10 வயது சிறுமியை கடந்த மே மாதம் பள்ளி விடுதியில் சேர்த்து விடுவதாகக் கூட்டி சென்றாராம்.  பின்னர் அப்பகுதியிலுள்ள  காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று  பாலியல் ரீதியான துன்புறுத்தினராம். 
  இது குறித்து சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் காப்பகத்தில்  கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்லத்துரையை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com