கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் சாரணர் இயக்க மாணவர், மாணவிகள் சனிக்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் சாரணர் இயக்க மாணவர், மாணவிகள் சனிக்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரணர் இயக்கம் சார்பில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட சாரணர் இயக்க மாவட்ட பயிற்சி ஆணையர் ஆ.ஜெயா சண்முகம் தலைமை வகித்தார். மன்னார் வளைகுடா உயிர்கோளம் காப்பாளர் மதன்குமார் முன்னிலை வகித்தார். 
தூய்மைப் பணியை மன்னார் வளைகுடா மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தேசிய பூங்கா தூத்துக்குடி வனவர் அருண்குமார் தொடங்கி வைத்தார்.  இதில், 52 சாரணர்கள், 93 சாரணியர்கள், 21 பொறுப்பாசிரியர்கள் ஈடுபட்டனர்.  சாரணர் இயக்க மாவட்ட அமைப்பு ஆணையர் வள்ளியம்மாள், தூத்துக்குடி மாவட்ட சாரணர் இயக்க மாவட்டச் செயலர் எட்வர்ட் ஜான்சன்பால், மாவட்ட ஆணையர் சண்முகம், மாவட்ட பயிற்சி ஆணையர் பி. சரவணன், மாவட்ட அமைப்பு ஆணையர் தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com