கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
கோவில்பட்டி கடலையூர் சாலை, பசுவந்தனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் மேற்பார்வையாளர்கள் குருசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப் பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com